11.18.2008

தூக்கம் வராமல்...

12-12-2008 0.50 a.m
இன்னைக்கு இல்லை நேற்று இரண்டு முறை எழுத எண்ணி பின் எழுத வார்த்தைகள் கிடைக்காமல் நிறுத்தினேன். மனதில் எதோ பெரிய/சிறிய விஷயம்/சம்பவங்கள் அடைதிருக்குமாயின், என் பேனா நுனி வழியே இறக்கி விடுவது அல்லது என் விரல் நுனிகளால் கீ-போர்டு வழியாக இறக்கி விடுவது என் வழக்கம். என்னால் என்னை இந்த இரண்டு வகையாலும், முழுமையாக உணர முடிகிறது, என் உள்ளத்துள் உள்ளதும் வெளி கொணர முடிகிறது. ஏனோ பேச்சு வழக்கில், இன்னும் அந்த வெளிகொனறல் வரவில்லை இன்னும். மிகவும் முயற்சித்து கொண்டு வரும் செயல்களில் இதுவும் ஒன்று.

சொல்ல வருவது என்ன வென்றால், அதற்க்கு முன் -என் கைஎழுத்து இன்று அழகாக இருக்கிறது. எழுதும் போதே ரசிக்கிறேன். மற்றொன்று மிகவும் வேகமாக எழுத முடிகிறது-மடை திறந்த வெள்ளம் போல்-சில வரிகளில் கோட்டில் வார்த்தைகள் தங்குகின்றன, சில வரிகளில், வார்த்தைகள் கோட்டில் தொங்கி ஊஞ்சல் ஆடுகிறது-என் மனம் போல். .....

சரி இதுக்கு மேல் இழுக்க விரும்பவில்லை..என் தேர்வு விடைத்தாளில் உள்ளது போல்...

நேற்று மதியம் நான் வலை பூக்களில் தாவி கொண்டிருக்கையில் , ஒரு கட்டுரை படிதேஅன். அது, ஒரு வெளி நாட்டில் வாழும் இந்தியத் தாய், தன் குழந்தைக்கு தன் தாய்மொழியை சொல்லி கொடுக்கிறாள். அந்த கட்டுரை அவள் ஆரம்பிக்கையில், தன் குழந்தைக்கு தாய் மொழி கற்று தர அவள் எடுத்து கொண்ட முயற்சிகள் பற்றியும், அந்த வகுப்புகள் பற்றியும் ரசிக்கும் படியாக எழுதி இருந்தார். அந்த கட்டுரை யை அவர் முடித்த விதம் தான் என்னை ஸ்தம்பிக்க வைத்து. அந்த குழந்தை தாய் மொழியை நன்றாக கற்றுகொண்டதாகவும், தாய் மொழியில்,

" சாவு என்றால் என்ன?"

" நான், நீ, எல்லோரும் சாவோமா?" என்று கேள்வி கேஅட்பதகவும், தன் தாய் மொழியில் அதற்க்கு பதில் சொல்ல தெரியவில்லை என்றும் முடித்திருந்தார் அந்த கட்டுரை யை. இந்த கட்டுரை படித்து, எழுத எண்ணி, ஒன்றும் எழுத முடியாமல் எழுந்தேன்.

மற்றொரு முறை எழுத நினைத்து மிகவும் வருத்தமானது...

இன்று தற்செயலாக செய்திகள் பார்கையில், சட்ட கல்லூரி மாணவர்கள் அடிதடி, என்று பாத்து நிமிடம் அந்த " அடிதடி" யை காட்டினார்கள். உங்கள் மனம் கல் என்றால், நீங்கள் அந்த கோப்பு கட்சியை எதிலாவது தேடி கண்டு பிடித்து பாருங்கள். ஒரு மாணவனை கட்டைகளால், இரும்பால் பாத்து பேர் மாறி மாறி அடிக்கிறார்கள்n, அவன் அசையாமல் படுத்திருக்கிறான்-வலி பொறுக்காமல். ஏறக்குறைய சேத பம்பை அடிப்பது போல தான். அத்தனை அடி அவனுக்கு-அந்த ரோவ்டிகள்/மாணவர்கள்/வக்கீல்களிடம் இருந்து . அதை விட கொடுமை அதை போலீஸ் வேடிக்கை பார்ப்பதும், செமேற மண் அதை படமாக்கி கொண்டிருப்பதும்...பொல்லாத உலகமடா என்று நினைக்க வைத்த கட்சிகள் அவை...

இது போதும், நான் இன்று நிறையா பெசிவிட்டேஅன். என் பேனா மெதுவாக ஓடுகிறது, மூச்சு வாங்கு கிறது போலும், பிறகு சந்திப்போம். ......

1. 20.a.m





10.23.2008

காட்டு வழி பாதை

தனியே போகுது பாதை
பாதையில் தனியே நான்...
நிழலே இல்லை இங்கே
நிஜமே எப்போதும்!

போதும் இந்த 4 வரி.

10.15.2008

பிரெஞ்சு கதை சொல்லும் இயற்கை

பிரெஞ்சு கதை சொல்லும் இயற்கை
இயற்கை கதை பேசுவதை படம் எடுத்திருக்கும் என் கணவர்க்கு பாராட்டுக்கள்.

Picture 035 copy

அந்த கல்யாண பொண்ணு கடந்து வந்திருக்க ஒல்லியான மரம் சொல்லுது:
"எங்க கல்யாணம் எல்லாம் அலங்காரம் இல்லாத, மழை வந்து ஆசிர்வதிக்கும் கல்யாணம். "
------------------------------------------------------------------------------------
Picture 135 copy

அந்த ஒல்லியான மரங்கள், தூரமா போகும் கார் ஐ பார்த்து சொல்லுது:
"உங்கள மாதிரி கனமான மனிதர்களை நாங்கள் சுமக்க தேவை இல்லை. இந்த இலகுவான கொடிகளை தான் சுமக்க வேண்டி இருக்கும். "
------------------------------------------------------------------------------------
Picture 158 copy

உடைந்து போன பாலம், அடுத்த படத்தில் இருக்கும் பாலத்தை பார்த்து:
"உன்னை போல என்னால உபயோகமா இருக்க முடியலையே "

------------------------------------------------------------------------------------
Picture 159 copy

இயங்கும் பாலம், உடைந்த பாலத்தை பார்த்து:
"நீ என்னை போல் சுமை தங்க தேவை இல்லை."
------------------------------------------------------------------------------------
Picture 163 copy

ஏன் இவ்ளோ வெக்க படர..இத்தனை வருஷம் ஆகியும் உன் வெக்கம் தான் என்னை எதோ பண்ணுது.

------------------------------------------------------------------------------------
Picture 181 copy

ஆள் தப்பி இருக்கும், (find the odd man out) அதை கண்டு பிடிச்சி, அதுக்கு ஒரு டயலாக் சொல்லுங்க யாராச்சும்?
------------------------------------------------------------------------------------
Picture 192 copy

இன்னும் கொஞ்ச நாள் ல நாமும் நம்ம முன்னோர்கள கீழப்போய் சிந்திப்போம். இந்த மனிதர்கள் தான் அவுங்க முன்னோர்களை மேல ப்போய் சந்திப்பார்கள்.
------------------------------------------------------------------------------------
Picture 225 copy

{நான் மீதிய அப்புறம் எழுதறேன்...கொஞ்சம் வேலை இருக்குது}
------------------------------------------------------------------------------------
Picture 368 copy
------------------------------------------------------------------------------------
Picture 369 copy
------------------------------------------------------------------------------------
Picture 372 copy

9.13.2008

குசேலன்...ரஜினி...பிரச்சனைகள் மற்றும் ரோபோ/இயந்திரன்

குசேலன் படம் ஓடாத தற்கு காரணம், அது ரஜினி படம் என்று ஒரு hype உண்டாக்கி, கடைசியில் படத்தில் ரஜினி வெறும் 20 நிமிஷம் மற்றும் தோன்றுவது, நம் மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. அந்த படத்தை சுற்றி எத்தனை பிரச்சனைகள்? மீனா விற்கு, தன் பெயர் நயன்தாரா பெயர்க்கு பின் வந்தது பிடிக்கவில்லை. பசுபதி க்கு தன்னை பின்னுக்கு தள்ளியதை பிடிக்காமல் ஆடியோ ரிலீஸ் க்கு வராமல் இருந்தது. ரஜினி டைட்டில் சாங் SPB படாமல் ஷங்கர் மஹாதேவன் பாடியது ரசிகர்களுக்கு பிடிக்க வில்லையாம்.

படம் தோல்வியால் theatre owner'ச ரஜினி இடம் நஷ்டம் கேட்டது. என்று ஒரு ஒரு பிரச்சனை ஆய் கிளம்பி, இப்பொழுது ஒரு வழியாய் எல்லாரும் மறந்து போனார்கள்.
ரஜினி கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறைய ஞானி குமுதத்தில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளிவிட்டார். நான் நினைப்பது..ரஜினி க்கு கருத்து உள்ள படம் எடுபடாது. மசாலா படங்களில் தான் சரி வரும்.
எது என்னவோ..படம் பார்த்து வந்தவர்கள் சொல்லுவது..படம் நல்ல இருக்கு..
ஏன் ஓடல பின்ன? ரஜினி தான்..


அடுத்து ரொபோ/இயந்திரன் நினைத்தால் பயமாக இருக்கிறது. ஷங்கர் க்கு உதவி செய்ய சுஜாதா இல்லாதது, ஐஸ்வர்யா ராய் பச்சன் heroine ங்கறது. அவுங்களுக்கு 1.3 கோடி கொட்டி கொடுப்பதுக்கு பதில் ஒரு robo heroine உருவாக்கி நடமாட விட்ருக்கலாம். படத்தோட ஸ்டில் ல ரஜினி ய பாக்க என்னமோ கதிர் பட ஹீரோ மாதிரி பாவமா இருக்கு. பொறுத்து பாக்கலாம்..

8.07.2008

Steps in programming


Before starting programming, understand the problem clearly.
Once you start the problem, half of the work is done.
Note:
Always remember, when you are writing a program you are expecting the program to perform an operation and give you the result in some format.
Then you can use some methods like flowchart, algorithms to express in terms of logic involved in the problem.

Flowchart – pictorial representation with symbols for input, output, actions.
Algorithm- sequence of operations to be performed.


Then, you can move to the designing.
For designing part we have UML (Unified Modelling Language) diagrams.

It is more operation oriented. What type of coding technique you are going to use to achieve your programming.
Take example of OOPS concept; it is an approach to solve a problem.
OOPS mainly concentrating on how you are separating the main problem into small units and what methods you are using to link them together.
Here we are using Object as small unit of big problem.
Let me explain with an example
Take Library Management Software,
Ask some questions yourself
What is the final usage of this software?

-To manage the book lists
-Provide access to the used
-Provide special access to the Librarian
-Enter the book details
-Maintain the book movement from library to the user.
How many users involved?
Librarian, who manage/update the book details
User, who search for the book details, get the books online
Is anybody involved other than them?
So, users are providing inputs.
Who is doing the operation of managing the book?
Library Management Software (LMS)
So, what are the operations of LMS?
-Manage the book detail database based on the user input
-Update the book details for new books
-Delete any missed/stolen books
-Print the list
So simple …. Right.
Then comes the design part
We have the users and the software.

You can transform this into an OOPS concept.
Here I have one software main module called LMS.
So I can have one class called CLMS.
Suppose if you prefer to have a separate module to manage the Book database then you have one more class call cBookManager.
So you can make these two classes to communicate in a certain way.

In OOPS, you are having inheritance (Remember father-son relationship)
So what I can do with this concept to solve this problem?

This way, you can divide the main software into sub modules based on the complexity and apply the concepts of OOPS to create the complete picture of software.
Three steps to programming using OOPS
For that, you have to know the basic concept of OOPS (that is very simple you can learn it in one day)
Learn to divide the complex problem into small modules.(most times it comes by experience, so don’t worry)
Apply necessary link between the sub modules
Above all, understand the problem clearly.

You complete the reading of the document. Read Again and think about how you design the Library Management Software.
You are a programmer.
Best Of Luck
vishnupurathan

8.03.2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


புரியாத பாஷைகள் புரியவைத்தாய்

பின் பேசவும் வைத்தாய்

எப்பொழுதும் உன்னை நினைக்க வைத்தாய்

அழ வைத்தாய்

சிரிக்க வைத்தாய்

புரிய வைத்தாய்

என் தாய்க்கு நிகராக இருக்கிறாய் !


என்றும் என் தாயாக இருக்க..இன்று இன்னொரு முறை பிறந்திருக்கும் உனக்கு

என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



8.01.2008

கருவளையம் தந்த கதா பாத்திரங்கள்

இரவில் கண் விழித்து கொண்டு இருந்தது.
எல்லோரும் எழும்பும் வேளையில் கண் தானே அயர்ந்து தூங்கி போனது.
பகலில் பின் விழித்த பொது ...
கருவளையம் சற்று அழுத்தமாக தான் தெரிகிறது.
கண்கள் வீக்கம் கண்டு இருந்தது.
மண்டை கனத்தது.
ஏழுந்து நடக்க முடியாமல் கால்கள் தள்ளாடின..
தலை சுற்றின..

ஒரு கதையை படித்து முடிக்க எண்ணி கண்கள் விழி திறந்து எனக்கு உதவி செய்தன. கதை முடிந்தும் கதையில் வந்த பாத்திரங்கள் அனைவரும் என்னை துரத்தி வந்து கொண்டே இருக்கின்றன. என் வேலை யை செய்ய விடாமல் துரத்து கின்றன. நான் நம்பிய கதா பாத்திரங்கள் என்னை அதிர்ச்யில் தள்ளியதை என்னால் தாங்க முடியவில்லை. கதையில் இறந்தவர்களும் ஆவி யை போல் துரத்து கிறார்கள்.

கதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். தீ. ஜானகிராமன் நின் அமிர்தம்
தான் அந்த கதை.
இவரின் மற்றொரு நாவல் மோக முள்..
நான் இன்னும் படிக்கவில்லை.

ஒரு ஒரு புத்தகமாய் படித்து பரணையில் மூட்டை கட்டி போட ஆசை. இங்கே உங்களோடு கருத்துகளையும் பகிரவும் ஆசை. விரைவில்!!!

7.21.2008

முத்தம் இட்டு என்னுள் ஓடிய மழை துளி !!!

நான் பூ படைந்து உனக்கு காத்து கிடக்கையில்
எனக்கு இனிமையாய்
தேனாய் முத்தம் இட்டு என்னுள் ஓடியது
மழை துளி !!!

நீ என்னிடத்தில் தோஷம் இல்லை என்று தெரிந்த பின்
கை கோர்த்தாய்...
ஆனால் எனக்கு எப்போதும் ஜலதோஷத்தை நினைவாக விட்டு போகும் என் மழை என்னிடம்!!!

நான் உன் வாசம் அறிந்து உன்னை அணைக்கும் முன்
மழையின்
மண் வாசனையின் அடிமை
என்பதை தெரிந்து கொள்!!!

மழை சாரலுக்கு பின் வில்லை போல் வளைந்து
வானளாவி பறந்து காட்சி கொடுக்கும் வானவில் லை
காண ஆவல் பூண்டதை விட
உன்னை காண நான் ஆவல் பூண்டது பெரியதல்ல!!!

நான் படிக்காத பரீட்சைக்கு எனக்கு
விடுமுறை வாங்கி கொடுத்த மழை எங்கே ??
நான் படித்த பரீட்சைக்கு என்னை சரியாக எழுத
விடாமல் என்னை ஆட்கொண்ட நீ எங்கே ??

மழை தன் நினைவாக என்னிடத்தில் விட்டு செல்லும் குளிரை
நடுங்கும் உடல் உன்னை தேடி...
மழை யை நாடி அல்ல என்பதை தெரிந்து கொள்...

இன்று நீ என்னை சொல்கிறாய்
மழையில் நினையாதே என்று..........

சரி உனக்காக கேட்கிறேன்
உன் காதல் மழையில் நினைவதற்கு!!!

6.04.2008

உங்கள் ஆதரவில் மீண்டும் உயிர்த்தெழும் அமுத தமிழ்

உங்கள் ஆதரவில் மீண்டும் உயிர்த்தெழும் அமுத தமிழ்......

எதை பற்றியும் இங்கு எழுத எனக்கு சிந்தனை இல்லை.

ஒரு கவிதை யை நன்று என்று அந்த கவிஞனிடம் கூறி பாருங்கள்... அவன் அந்த இரவே 100 கவிதைகளை எழுதி முடிப்பான். இங்கு நானும் அப்படியே..
அமுத தமிழ் இற்கு புதிதாய் வருபவர்கள் தரும் கருத்துக்கள் என்னை இங்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

நீங்களும் இங்கு உங்கள் படைப்பை பகிர்ந்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன்.

எனது e-mail address: lavraj2k4@gmail.com

கவிதையோ, சினிமா விமர்சனமோ, உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களோ, எது வேணுமானாலும் இருக்கலாம். ஆனால் அது உங்கள் படைப்பாக இருப்பது அவசியம்.

தமிழ் இல் டைப் செய்ய http://www.google.com/transliterate/indic/Tamil


3.08.2008

மகளிர் தின வாழ்த்துக்கள்

உங்களுக்குள் இருக்கும் பெண்மை யை உணருங்கள்
பெண்கள் தினத்தை கொண்டாடுவோம்.

உங்கள் பலம்
உங்கள் மன வலிமை
உங்கள் நம்பிக்கை
உங்கள் செயல் ஆற்றல்
உங்கள் வீரம்
உங்கள் மரியாதையை

இன்னும் பல....பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இவை அனைத்தையும் நீ உணர்ந்தால்
வெற்றி உன் பக்கம்
வளர்பிறையாய் வளர்ந்திரு என்றென்றும்..........

மகளிர் தின வாழ்த்துக்கள்
லாவண்யா

3.03.2008

காற்று.....ஆசை

காற்று அதிகம் அடிக்கும்
இடத்தில் எதுவும் தங்காது

காற்று புகாத இடத்திலும்
எதுவும் பிழைக்க்காது.

காற்றி சீராக அடிக்கும் இடத்தில் தான்
எல்லாமே சீராக இருக்கும்.

அதிகமாகவும் ஆசை படாதே
ஆசை படாமலும் இயங்காதே
அளவான ஆசையுடன்
ஆளுமை செய்வாய் நீ
உன்னை என்றென்றும் .......

உன்னை நீ கேட்க சில கேள்விகள்??


செய்ய நினைப்பதை
செய்ய விடாமல்
தடுப்பது எது?
சூழ்நிலையா?
உன் மனதா?
அதை நீ அறிந்தாலே போதுமே...
நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் அறிந்து செயல்படு !!!
வெற்றி உன்னுடைமை ஆக்குவாய் !!

2.27.2008

எழுத்தாளர் சுஜாதா (A Tribute To Writer Sujatha)


எழுத்தாளர் சுஜாதா வை எனக்கு முதலில் அறிமுகபடுதியது அவரது "24 ரூபாய் தீவு " நாவல். ஏனோ தெரியவில்லை அந்த நாவல் லை இரு முறை தொடர்ந்து வாசித்தேன். கண்டிப்பாக புரியவில்லை என்பதற்காக அல்ல.
அவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரின் விஞ்ஞானச் சிறு கதைகள், ஸ்ரீ ரங்கத்து கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவரின் எழுத்துக்கள் எப்போதும் நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்..நாம் வாசிக்கும் போதெல்லாம் சுவாசித்து கொண்டு இருக்கும்.
அவரின் நூல்கள் வரும் generation அயும் கவரும்..அவர்களையும் எழுத்துலகிற்கு கொண்டு வரும்.

சுஜாதா எனும் ரங்கராஜன் என் Role Model.

அவரிடம் இருந்து நான் கற்றது.. விழித்து கொண்டே இருக்க..கற்று கொண்டே இருக்க..கவனித்து கொண்டே இருக்க..வாசித்து கொண்டே இருக்க..எழுதி கொண்டே இருக்க..எழுத்தில் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்க.

வருத்தத்துடன் லாவண்யா Let his soul Rest in Peace. My Deep Condolences to the family.
http://www.writersujatha.com/




2.21.2008

படிச்சு என்ன கிழிச்சோம்-1


எங்க அபார்ட்மென்ட் ல இருக்கற பசங்க கூட என்ன ஆன்டி ன்னு தான் கூபிடறாங்க. ஆனா இந்த பூ விக்கற பசங்க எவ்ளோ அழகா அக்கா ன்னு கூபிடறாங்க.


பூ விக்கற பய்யன் அல்லது பொண்ணு கிட்ட பேச்சு கொடுத்து இருக்கீங்களா?
அவுங்க எல்லாரும் செய்யற வேலையை அலட்டிகாம செய்யறாங்க ன்னு நான் பார்த்து நிறையா தடவை ஆச்சர்ய பட்டு இருக்கேன்.


இப்போ பப்ளிக் எக்ஸாம் வரபோகுது. 12th க்கு மார்ச் 3 ஆம் தேதியும், 10th க்கு மார்ச் 27 ஆம் தேதியும் எக்ஸாம் தொடங்க போகிறது.


நான் பார்த்த பூ விற்கும் பசங்க 10th படிக்கற பசங்க. அவுங்க படிக்காம இப்படி வேலை செய்யரத பார்த்தா எனக்கு பயமா இருக்கு.

ஏன்னா என்ன அந்த அளவுக்கு பயம் காட்டி இருந்திருக்காங்க என் அம்மா அப்பா.


எக்ஸாம் க்கு மூன்று மாசம் முந்தியே டிவி பரனை க்கு ஷிபிட் ஆயிடுத்து.அப்பயும் நம்ம கில்லாடி இல்ல..விடுவோமா..பக்கத்து வீட்டு டிவி ல இருந்து வர்ற ஆடியோ மட்டும் கேட்டு கிட்டு இருப்பேன்(புக் திறந்தபடி கை யில் இருக்கும்).


அந்த ரெண்டு பசங்க கிட்டயும் நல்ல படிங்க..அலட்சிய படுத்தாதீங்க ன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். பாக்கலாம்.. என்ன மார்க் எடுக்கறாங்க ன்னு.

அன்னைக்கு அப்பாவி போல் அ,ஆ படிச்சோமே அது தான் மனதில் இன்றும் இருக்கும் படிப்பு. மத்தவுங்க ல போல நாமளும் டாக்டர், engineer அகனும்ன்னு படிச்சதுல எனக்கு ஒண்ணும் நினைவு ல இல்ல..உங்களுக்கு?
image from southrange.com

2.18.2008

தமிழ் M.A


தமிழ் M.A
ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் படத்திற்கு மானியம் கிடையாது என்பதற்காக கற்றது தமிழ் என்று படத்தை மாற்றி இருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது என்று தலையில் அடித்து கொள்ள தோன்றுகிறது.


இந்த படம் காதல் படமா, கருத்து சொல்ல வந்த படமா, இயக்குனரின் படமா, பாருங்க இந்த உலகத்தை,மனிதர்களை என்று நமக்கு போட்டு காட்டும் படமா என்று தெரியவில்லை. ஏனெனில் நான் மேல் குறிப்பிட்ட எல்லாத்தையும் தழுவி இருக்கிறது இந்த கற்றது தமிழ்.


பாராட்ட பட வேண்டிய விஷயங்கள்:

* இசை

* தமிழ் மட்டும் படிச்சா என்ன ஆகும் என்று உணர்த்திய இயக்குனர்க்கு

* அருமையான காதல் பின்னணியில் கதை ஓடுவது

* அழகம் பெருமாள் நடிப்பு

* அழகான நடிகை


வெறுப்பு ஏற்றிய விஷயங்கள்:

* கால் போன போக்கில் கதை வளைந்து ஓடிய இடங்கள்

* நிஜமா தான் சொல்றியா ன்னு படத்தின் பிர்பாதியிலும் கேட்டு கொண்டு இருக்கும் நடிகை.


என் கை தட்டிய இடங்கள்:

*கருணாஸ் காமெடி

*சுடு தண்ணி குடிக்கும் காட்சி

image courtesy: www.behindwoods.com

காதல் படுத்திய பாடு கொஞ்சம் இல்லை

விடை பிரிய மனம் இல்லாமல் போனாலும்...
விடை பிரிய என்னும் காதல் மனது...

இனிமையான பாடல்களை உதடு மட்டும் பாடி கொண்டே இருக்கும்
நீ மனதில் பிம்பமாய் ஆட
என்னை பார்பவர்களுக்கு கேலி கூத்து போல் இருக்கும்.

என் பலம்

நான் என்னை புரிந்து கொண்டு இருப்பதும்
இன்னும் என்னை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் தான்
என் பலம்.

2.14.2008

காதலில் கரைவது போல்!


நாட்கள் வருடங்களில் மறைந்திருக்கலாம்

நொடிகள் நிமிடத்திற்குள் கரைந்து விடலாம்

நான் உன்னுள் மறைந்து உன் காதலில் கரைவது போல்!



என் உடலில் ஓடும் குருதியை போல் உன் நினைவும் என்னுள் ஓடி கொண்டே தான் இருக்கிறது!இதற்க்கு மேல் என்ன சொல்ல


-உன் லாவண்யா

2.05.2008

உனக்காக - 2 (பூ)

வலை தளங்களில் உனக்கு கொடுக்க பூக்களை தேடினேன்.

கிடைக்கவில்லை உன் ரசனைக்கு ஏற்ற பூ

உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறது போல அந்த பூ!

உனக்காக-1

வித்யாசமாய் தெரிகிறது இந்த பூமி...நான் உன்னை கண்ட தாலோ !

கவித்துவமாய் இருக்கின்றன என் எழுத்துக்கள் உன் மேல் காதல் வய பட்ட தினலோ !

நினைத்து கொண்டே தான் இருந்தேன்..ஒரு நொடி உன்னை மறக்க நினைத்தாலும் என்னால் முடியாமல் போயிற்று.

மீண்டும் உன்னை பற்றி நினைத்து கொண்டே தான் இருக்கிறேன்.

கவிதை எழுத கூட முடியாமல் உன்னை நினைத்து கொண்டு இருந்ததை இன்று தான் என்னால் பதிவு செய்ய முடிகிறது.
பழகிவிட்டேன் போலும் உன்னை நினைத்து கொண்டே எழுதுவதற்கு.

2.04.2008

தலைப்பு கொடுப்பது அவசியமா மனதின் சிந்தனைக்கு

கவிதை எழுதும் பழக்கம் என்னிடம் இன்னும் இருக்கிறது என்று எனக்கு நானே நிருபீத்துகொள்ள வேண்டி இருக்கிறது என்ன செய்ய.

ஒரு விஷயம்..நம்மை நாமே நம்பாமல் இருக்க கூடாது..

சுமக்க முடியாத பாரத்தை சுமப்பது பள்ளி பிள்ளைகள் மட்டும் இல்லை..வயோதிக பிட்சை காரர்களும் தான்.
நான் இன்று கண்ட அந்த முதியவர்க்கு அறுபது வயது தாண்டி இருக்கும்..ஆனாலும் பிழைப்புகாக மூட்டை மூட்டை யாய் குப்பை களை சுமந்து போகிறார்.

கவிதை:

பார்த்த நிமிடம் தெரிய வில்லை உன்னை பற்றி!

நீ என்னிடம் சேர்ந்த நிமிடம் உணரவில்லை உன்னை பற்றி!

நீ கேள்வி கேட்ட தருணம் நான் மறந்தேன் உன்னை!

நீ இறக்கையில் என்னை உன்னிடம் வைத்தா எரிப்பார்கள்?

என்று கேட்டாயே.

ஆம் பணம் என்னை பார்த்து கேட்டது.

கல்லூரி.....விமர்சனம்


சமீபத்தில் கண்ட திரைப் படங்களை பற்றி விமர்சிக்க எனக்கு ஏன் அப்படி ஒரு ஈடுபாடு என்று புரியவில்லை. ஒரு வேலை..நான் பள்ளியில், கல்லூரியில் நண்பர்களிடம் திரைபடங்களை பற்றி பேசியதினாலும் இப்பொழுது அதுக்கு ஒரு வழியும் இல்லாமல் போனதினாலும் நான் இந்த திரைப்பட விமர்சகி பதவி எடுத்து கொண்டு இருக்கலாம்.

தலைப்பிற்கு வருகையில்..கல்லூரி.....இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றி அடையாமல் போனதற்கு நான் கருதும் காரணம்...கிளைமாக்ஸ் ல் அழுகை வரவில்லை என்ற காரணம் தான்.என்னால் படத்தில் ஒன்ற முடிந்தது. ஆனால் கிளைமாக்ஸ் என்னை காம்ப்ரமைஸ் பண்ணவில்லை என்பது தான் இந்த படத்தின் மைனஸ் என்று நான் கருதுகிறேன்.


என்னை ஈர்த்த காட்சிகள் ...தமன்னா ஹீரோ வை தேடி அவன் வீட்டிற்க்கு வந்து போன காட்சி. தமன்னா மற்றும் ஹீரோ விற்கு காதல் வரும் விதத்தை கட்டிய காட்சிகள். பஸ் ஸ்டாப் ல் தமன்னா காத்துகொண்டிருக்கும் போது பின்னாடி ஒலிக்கும் பாடல் காட்சி.


என் வேதனை:
இன்னும் அந்த நிஜ குற்றவாளிகள் தப்பித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் வேதனை..கடவுள் ஏன் தண்டிக்காமல் கார்துகொண்டு இருக்கிறார் என்று இன்னும் புரியவில்லை.


image coutesy:one india

1.13.2008

இடையில் மாட்டி கொண்டு

சிந்தனைக்கும் செயலுக்கும் இடையில் மாட்டி கொண்டு தவிக்கும் நான்

சிந்திக்காமல் இருக்கையில் ஜடம் ஆகிறேன்.

செயல்படாமல் இருக்கையிலும் ஜடம் ஆகிறேன்.

- இப்படிக்கு பாதி ஜடம் .

கேள்வி

கடவுளை காண நேர்ந்தால் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?

நான்: இத்தனை நாள் நான் உங்களிடத்தில் வேண்டியது தெரியுமா?

கடவுள்: தெரியும்

நான்:பின் ஏன் நான் வேண்டியது எதுவும் நடக்க வில்லை

கடவுள்:நீ இன்று என்னை கண்டு இந்த கேள்வி கேட்க

கூடார வள்ளி

கூடார வள்ளி...ஆண்டாள் திருமணம்.மார்கழி மாதத்தில் கொண்டாட படுகின்றது. 27 ஆவது பாசுரம் அம்பாவடை வரும் நாளில் கொண்டாட படுகின்றது. இதை பற்றி தெரிந்தவர்கள் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

1.10.2008

அழைப்பு

இந்த வலை பூ வில் உங்கள் எழுத்துக்களை யும் பதிக்க விரும்பினால் எனக்கு மெயில் அனுப்பவும்.

lavraj2k4@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். சுப்ஜெச்ட் ல் அமுத தமிழ் என்று குறிப்பிடவும்.

புத்தகம்,கவிதைகள்,சினிமா என்று தமிழ் சம்பந்த பட்ட எதையும் விமர்சிக்க ஆவல் இருப்பின் அதையும் எனக்கு மெயில் ல் அனுபலாம். ஆங்கில வடிவான தமிழில் அனுபினாலும் மகிழ்ச்சி.

விரைகிறேன்

இன்றைக்கும் நாளைக்கும் வேற்றுமை கற்பிக்க விரைகிறேன் நாளை என்னால் விரையாமல் போக வைக்க போகும் முதுமை யை நினைத்து விரைகிறேன் என்றும் இளமையுடன் இருக்க விரைகிறேன் முதுமையில் எதையும் இழக்கவில்லை என்ற சமாதானம் கற்பிக்க விரகிறேன் । நான் விரையும் வேகத்தில் உங்களிடும் சொல்ல நினைத்த வார்த்தைகள் நீங்களும் விரையுங்கள் உங்களை நேரம் இருந்தால் சந்திக்கிறேன் .

-லாவண்யா

1.06.2008

கவிதை

என் மேல் ஏன் இந்த கோவம் உனக்குள்ளே தானே கர்த்து கொண்டு இருந்தேன்
என்னை ஏன் உணரவில்லை இப்பொழுது ஏன் என்னை விடாமல் விரட்டுகிறாய் ..
என் கவிதைகள் என்னிடம் கேட்ட கேள்விகள்।


பதில் :

உன் அருமை தேடி ஓடி வந்தேன் என்னை ஏற்று கொள் சுவைக்க இடம் கொடு மறக்காமல் மன்னித்து விடு ....காதுகொடு இருகிறேன் மான்னிப்பு க்காவும் உன்னை படைப்பதர்காகவும்.

-லாவண்யா