7.21.2008

முத்தம் இட்டு என்னுள் ஓடிய மழை துளி !!!

நான் பூ படைந்து உனக்கு காத்து கிடக்கையில்
எனக்கு இனிமையாய்
தேனாய் முத்தம் இட்டு என்னுள் ஓடியது
மழை துளி !!!

நீ என்னிடத்தில் தோஷம் இல்லை என்று தெரிந்த பின்
கை கோர்த்தாய்...
ஆனால் எனக்கு எப்போதும் ஜலதோஷத்தை நினைவாக விட்டு போகும் என் மழை என்னிடம்!!!

நான் உன் வாசம் அறிந்து உன்னை அணைக்கும் முன்
மழையின்
மண் வாசனையின் அடிமை
என்பதை தெரிந்து கொள்!!!

மழை சாரலுக்கு பின் வில்லை போல் வளைந்து
வானளாவி பறந்து காட்சி கொடுக்கும் வானவில் லை
காண ஆவல் பூண்டதை விட
உன்னை காண நான் ஆவல் பூண்டது பெரியதல்ல!!!

நான் படிக்காத பரீட்சைக்கு எனக்கு
விடுமுறை வாங்கி கொடுத்த மழை எங்கே ??
நான் படித்த பரீட்சைக்கு என்னை சரியாக எழுத
விடாமல் என்னை ஆட்கொண்ட நீ எங்கே ??

மழை தன் நினைவாக என்னிடத்தில் விட்டு செல்லும் குளிரை
நடுங்கும் உடல் உன்னை தேடி...
மழை யை நாடி அல்ல என்பதை தெரிந்து கொள்...

இன்று நீ என்னை சொல்கிறாய்
மழையில் நினையாதே என்று..........

சரி உனக்காக கேட்கிறேன்
உன் காதல் மழையில் நினைவதற்கு!!!

6.04.2008

உங்கள் ஆதரவில் மீண்டும் உயிர்த்தெழும் அமுத தமிழ்

உங்கள் ஆதரவில் மீண்டும் உயிர்த்தெழும் அமுத தமிழ்......

எதை பற்றியும் இங்கு எழுத எனக்கு சிந்தனை இல்லை.

ஒரு கவிதை யை நன்று என்று அந்த கவிஞனிடம் கூறி பாருங்கள்... அவன் அந்த இரவே 100 கவிதைகளை எழுதி முடிப்பான். இங்கு நானும் அப்படியே..
அமுத தமிழ் இற்கு புதிதாய் வருபவர்கள் தரும் கருத்துக்கள் என்னை இங்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

நீங்களும் இங்கு உங்கள் படைப்பை பகிர்ந்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன்.

எனது e-mail address: lavraj2k4@gmail.com

கவிதையோ, சினிமா விமர்சனமோ, உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களோ, எது வேணுமானாலும் இருக்கலாம். ஆனால் அது உங்கள் படைப்பாக இருப்பது அவசியம்.

தமிழ் இல் டைப் செய்ய http://www.google.com/transliterate/indic/Tamil


3.08.2008

மகளிர் தின வாழ்த்துக்கள்

உங்களுக்குள் இருக்கும் பெண்மை யை உணருங்கள்
பெண்கள் தினத்தை கொண்டாடுவோம்.

உங்கள் பலம்
உங்கள் மன வலிமை
உங்கள் நம்பிக்கை
உங்கள் செயல் ஆற்றல்
உங்கள் வீரம்
உங்கள் மரியாதையை

இன்னும் பல....பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இவை அனைத்தையும் நீ உணர்ந்தால்
வெற்றி உன் பக்கம்
வளர்பிறையாய் வளர்ந்திரு என்றென்றும்..........

மகளிர் தின வாழ்த்துக்கள்
லாவண்யா

3.03.2008

காற்று.....ஆசை

காற்று அதிகம் அடிக்கும்
இடத்தில் எதுவும் தங்காது

காற்று புகாத இடத்திலும்
எதுவும் பிழைக்க்காது.

காற்றி சீராக அடிக்கும் இடத்தில் தான்
எல்லாமே சீராக இருக்கும்.

அதிகமாகவும் ஆசை படாதே
ஆசை படாமலும் இயங்காதே
அளவான ஆசையுடன்
ஆளுமை செய்வாய் நீ
உன்னை என்றென்றும் .......

உன்னை நீ கேட்க சில கேள்விகள்??


செய்ய நினைப்பதை
செய்ய விடாமல்
தடுப்பது எது?
சூழ்நிலையா?
உன் மனதா?
அதை நீ அறிந்தாலே போதுமே...
நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் அறிந்து செயல்படு !!!
வெற்றி உன்னுடைமை ஆக்குவாய் !!