2.04.2008

தலைப்பு கொடுப்பது அவசியமா மனதின் சிந்தனைக்கு

கவிதை எழுதும் பழக்கம் என்னிடம் இன்னும் இருக்கிறது என்று எனக்கு நானே நிருபீத்துகொள்ள வேண்டி இருக்கிறது என்ன செய்ய.

ஒரு விஷயம்..நம்மை நாமே நம்பாமல் இருக்க கூடாது..

சுமக்க முடியாத பாரத்தை சுமப்பது பள்ளி பிள்ளைகள் மட்டும் இல்லை..வயோதிக பிட்சை காரர்களும் தான்.
நான் இன்று கண்ட அந்த முதியவர்க்கு அறுபது வயது தாண்டி இருக்கும்..ஆனாலும் பிழைப்புகாக மூட்டை மூட்டை யாய் குப்பை களை சுமந்து போகிறார்.

கவிதை:

பார்த்த நிமிடம் தெரிய வில்லை உன்னை பற்றி!

நீ என்னிடம் சேர்ந்த நிமிடம் உணரவில்லை உன்னை பற்றி!

நீ கேள்வி கேட்ட தருணம் நான் மறந்தேன் உன்னை!

நீ இறக்கையில் என்னை உன்னிடம் வைத்தா எரிப்பார்கள்?

என்று கேட்டாயே.

ஆம் பணம் என்னை பார்த்து கேட்டது.